நீங்கள் என்னை பலியிடலாம்...

நீங்கள் என்னை பலியிடலாம்...

எனக்கு வஞ்சகர்களை
அடையாளம் காண
சற்றே தாமதம் ஆகும்.

என் நண்பர்கள் கூட
நீண்ட நாட்களுக்கு பிறகு
புரிந்துகொண்டவர்களே..
புரிந்துகொள்ளப்பட்டவர்களே...

துரோகங்களை நேருக்கு நேர்
நிருபிப்பதில்லை.

காத்திருந்து, தருணம் பார்த்து,
நான் உறங்கும் பொழுதுகளில் கூட
என்னை வேட்டையாட காத்திருப்பவர்களை
நான் கவனத்தில் கொண்டதில்லை.

முகநக நட்பது முடிந்தபின்
கழுத்தறுக்க கத்தியை தீட்டுபவர்களை
கவனிக்காமல் இருந்ததுண்டு.

என் மீது கல்லெறியும் தருணத்திலும்
நான் சற்றே அசமந்தமாக இருந்ததுண்டு.

பூக்களுக்களுக்காக அலையாதிருப்பதை போலவே
முட்களையும் பொருட்படுத்துவதில்லை.

காத்திருக்கும் தருணங்களில்
வரவிருப்பது...
மலர் மாலையா? வளையமா?
என்பதை கூட யோசிக்கத் தவறியவன்.

மேற்சொன்ன
இத்தனை குற்றச்சாட்டுகள்
என் மீது இருப்பதால்...
நீங்கள் என்னை பலியிடலாம்.
ஆம். நீங்கள் என்னை பலியிடலாம்.

Post a Comment

  © View koottani blog for the teachers by TAAK KILVELUR maintained by C.ARULSELVAM Thank you visit again

Back to TOP