நேரம்.

அலையும் விழிகளோடு
இரை கிடைத்த பொழுதுகளிலும்,
வெறித்த கண்களோடு
பசியாறும் பொழுதுகளிலும்
நான்,
''நானா''கவே
அழைக்கப்பட்டேன்.
நடத்தப்பட்டேன்.

உங்களுக்கு எளிதாய் ஒரு  இரை தேவையெனில்
எனக்கு புதிதாய் ஒரு பெயர்
சூட்டப்பட்டு...

நீங்கள் மிகக்கூட்டமாய்
பாதுகாப்பாக நின்று கொள்ளும் தருணத்தில்
என் கழுத்து நோக்கி
ஏதேனும் ஒரு பெயரிட்ட அரிவாள்
இறக்கப்படும்.

Post a Comment

  © View koottani blog for the teachers by TAAK KILVELUR maintained by C.ARULSELVAM Thank you visit again

Back to TOP