புதிது

நெடுஞ்சாலை நடுவே
திரியும் நாயென
வழிபோக்கர்களுக்கு
சற்றும் அறிமுகமில்லாதது
என் காதல்.

வழிபோக்கர்கள்
தங்கள் பாதையில்
குறுக்கிட்டதாய்
என்ன என்னமோ
திட்டுகிறார்கள்...

காலங்காலமாக
இந்த பூமியில்
காதலும் நாய்க்குட்டிகளும்
எங்கும் திரிந்து
கொண்டுதானிருந்தது...

நெடுஞ்சாலைகளும்
வழிபோக்கர்களும் தான்
புதிது.

Post a Comment

  © View koottani blog for the teachers by TAAK KILVELUR maintained by C.ARULSELVAM Thank you visit again

Back to TOP